அண்மையில் எனக்குக் கட்டாயமாக நிறைய ஒய்வு கிடைத்தது. நாடகங்கள் பல படித்தேன். அவற்றில் பாடி சாயேவ்ஸ்கியின்
அருமையான டெலிவிஷன் நாடகங்களையும், ஆர்தர் மில்லரின் டெத் ஆஃப் எசேல்ஸ்மேன்' ஐயும் படித்த போது அந்த நாடகங்களின் மையக்கருத்தான Tragedy of the common man நம்முடைய சூழ்நிலைக்கும் பொருந்துவதை உணர்ந்து இந்த நாடகத்தை எழுத்த் தொடங்கினேன். இதன் முக்கிய கதாபாத்திரமான வரதராஜன் ஒரு சாதாரண மனிதராக இருப்பினும், அவரது வீழ்ச்சியில் ஒரு காலகட்டத்தின் ஒரு தலைவனின் வீழ்ச்சியின் முழுமை இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
- சுஜாதா .