திருத்தொண்டர் காப்பியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை சூ. இன்னாசி என்னும் புலவர் படைத்துள்ளார். 2007இல் காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இக்காப்பியம் அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் வரலாற்றையும் அவர் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு தம் உயிரை பலியாக்கியதையும் எடுத்துரைக்கிறது.