அம்மா
நம் ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் வித்திட்டு, வாழ்க்கையின் பல
அர்த்தங்களை, பல நேரங்களில், பலவிதமாகப் புரிய வைக்கின்ற வள் அம்மா தான்.
மனித நாகரீகத்தின் சிறந்த பிரதிபலிப்பு அம்மா தான். ஆனால் எல்லா
அம்மாக்களும் ஒரே மாதிரி இருந்து விடுவதில்லை. இந்திய கலாச்சாரத்தின் ஆதார
சுருதி அம்மா தான். தர்மத்தை, நாட்டுப்பற்றை, குடும்பப்பற்றை, மனித நேயத்தை
வளர்த்தவள் அன்றைய அம்மா. வெறும் படிப்பையும், தேவைக்கு அதிகமான
சுயநலத்தையும், தான் அறியாமல் ஊட்டி வருபவள் இன்றைய அம்மா. ஜீரணிக்க, சற்றே
கசப்பான உண்மை இது. இன்றைய சமூக அவலங்கள் பலவற்றிற்கும் பின்னணி இது. குறை
கூறுவது நோக்கமல்ல. இதமாக சுட்டிக்காட்ட நான் எடுக்கும் முயற்சியே
"அம்மா". அம்மா என்றுமே அம்மா தான். ஒவ்வொரு அம்மாவும் ஒரு கதைதான். ஒரு
காலக்கட்டத்தின் பிரதிபலிப்புத்தான்