மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் அறநூல்கள் நம் அருந்தமிழ் மொழியிலே அளவிடற்கரியனவாக உள்ளன. அவற்றுள் பிற்கால நீதி நூல்கள் என்று போற்றப் பெறும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதி நெறி விளக்கம், நீதி வெண்பா, அறநெறிச்சாரம் ஆகிய அறநூல்களுக்கு எல்லார்க்கும் புரியும் வண்ணம் இனிய எளிய தமிழிலே உரை எழுதியுள்ளேன். மூலமும் உரையும் கொண்ட இந்நூலினை உங்கள் முன் படைக்கிறேன்.