பல்வேறு சந்தர்ப்பங்களில் சீனத்து இலக்கியங்களிலிருந்து மொழிபெயர்த்த குழந்தை இலக்கியக் கதைகள் நான்கு இப்போது ஒரே நூலாக வடிவம் பெறுகின்றன. மொழியாக்கத்தில் ஆர்வம் ஊட்டி, சிறுநூல்களாகவும், முன்பு வெளியிட்ட மதிப்பிற்குரிய அண்ணன் கவிஞர் மீரா அவர்களுக்கு என் நன்றி உரியது. கதைகளை வெளியிட்டு உதவிய கலைமகள், மஞ்சரி ஆகிய இதழ்களுக்கும் என் நன்றி உரியது.