மருத்துவர் அருண்சின்னையா எழுதிய வெல்லம் சர்க்கரை பற்றிய இந்த நூல், வெல்லத்தைப்பற்றியும், அதன் இனிப்புச்சுவையையும் மட்டும் பேசவில்லை. வாழ்க்கையை இனிமையாக்குவதைப் பற்றிப் பேசுகிறது. வருமுன் காப்பதைப் பற்றி, வந்தபின் பராமரிப்பது பற்றி, கருப்பட்டி, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து சமைப்பதுபற்றி, இந்நூலாசிரியர், இந்நூலில், விவரங்களை வெகுவாய் நிறைத்திருக்கிறார். அறுசுவையும் முரண்பட்ட குணங்களும் கலந்ததுதான் நமது வாழ்க்கைப்பாங்கு. வாழ்வின் கசப்பான அனுபவங்களை, அதே வாழ்வில் இனிமையான வசந்தத்தைக் கொண்டுவரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.