அன்று கசப்பாய் இருந்த வெந்தயக்களியின் அருமை, மருத்துவப் பெருமையை பின்னாளில் உணர்ந்தபோது, அன்னையின் பாசம் கண்ணில் நீர் பெருகச் செய்தது. சிறுவயதில் வெய்யிலில் சுற்றித் திரிந்து விளையாடி வந்தபின் வயிற்றைச் சுற்றி வலி எடுக்கும். சுருண்டு படுத்து கதறத் தோணும். அப்பொழுது ஒரு டம்ளர் மோரில் சிறிது பெருங்காயம் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள். வயிற்றுவலி பஞ்சாய்ப் பறந்து போகும். பெருங்காயம், வெந்தயம் இதனுள் புதைந்துள்ள மருத்துவ உண்மைகளை தெளிவுபட எழுதியுள்ள அன்புத்தம்பி மருத்துவர் அருண்சின்னையா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.