போதைப் பொருள் கடத்தும் மாபியா கும்பலின் ஆதிக்கத்தை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கிரைம் நாவல். கடத்தல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்பவன் எஸ்கொபார். பயங்கர போதைக் குற்றங்களுக்காக அவனைத் தங்களிடம் அனுப்பும்படி அமெரிக்கா அரசு கேட்க, கொலம்பியா அரசும் ஒப்புக்கொண்டது. எஸ்கொபாரையும் அவன் கும்பலையும் நாடு கடத்தவேண்டும் என்று குரல் கொடுப்பவர்களைப் பிணைக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு சித்திரவதை செய்கிறது போதைக்கும்பல். இதிலிருந்து கதையின் வேகம் சூடு பிடிக்கிறது. திடுக்கிடும் சம்பவங்களின் பின்னணியில் படிக்கத்தூணடும் ஆவலுடன் விறுவிறுப்பாக இந்நாவலை படைத்திருக்கிறார் ரா.கி. ரங்கராஜன். நன்றி: தினத்தந்தி, 7/8/13.