என் வாழ்நாளில் ஒரு கதையாவது இவரைப் போல எழுதிவிடமாட்டேனா?' என்று மனத்துக்குள் ஏங்காத எந்த இந்திய எழுத்தாளரும் இருக்க முடியாது. வாழ்ந்த காலத்திலும், மறைந்த பிறகும் சந்தேகமில்லாமல் பஷீர் ஓர் எழுத்துலக சுல்தான். மிகையில்லை; கேரளாவில் அவரை 'பேப்பூர் சுல்தான்' என்றேதான் அழைப்பார்கள். சுதந்தரப் போராட்ட வீர்ராக, கைதியாக, சூஃபி சந்நியாசியாக, பேதை அடைமையாக, சித்தம் கலங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியாக, தள்ளாத வயதிலும் தாகம் தணியாத காதலனாக தனக்கு நேர்ந்த ஒவ்வோர் அனுபவத்தையும் இலக்கியமாக்கியவர் பஷீர். நகலெடுக்கவே முடியாத மொழி அவருடையது.