அபாயகரமான கிண்டல்கள், இஸ்லாம் குறித்த எரிச்சலூட்டக் கூடிய விமரிசனங்கள், ஒரு குறிப்பிட்ட தேசிய அடையாளத்துக்குள் தன்னை பொருந்த்திப் பார்க்க முடியாத யதார்த்த வாழ்வின் அவலம் விளைவிக்கும் விரக்தி என்று ரஷ்டியின் எழுத்தை வகைப்படுத்த முயன்றாலும் எந்த வரையறைக்குள்ளும் அடங்காத ஒரு மாயாஜாலத்தை அவரது எழுத்து அவ்வப்போது நிகழ்த்தி வருவதால்தான் ரஷ்டி ஒரு தவிர்க்க முடியாத முக்கிய படைப்பாளியாக சர்வதேச அளவில் அடையாளம் காணப்படுகிறார். அவரது எழுத்தைப் போலவே ஜாலங்களும் சாகஸங்களும் மிக்கதுதான் அவரது வாழ்க்கை. தீராத காதல்கள், ஓயாத போராட்டம், முற்றுப் பெறாத மரணபயம். இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான எழுத்தாளர்களுக் ஒருவரான சல்மான் ரஷ்டியின் எழுத்தையும் வாழ்வையும் துல்லியமாக அறிமுகப்படுத்தும் விறுவிறுப்பான நூல் இது.