வடதுருவப் பகுதியான அலாஸ்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆதாரங்களுடன் தம் அனுபவத்தைக் கலந்து தருகிறார் நூலாசிரியர் இலந்தை சு. இராமசாமி. அலாஸ்கா குறித்த ஒவ்வொரு தகவலுமே பிரமிப்பூட்டுவது. இந்நூலில் இலந்தை கையாண்டிருக்கும் கவித்துவ மொழி, அலாஸ்காவின் அழகையும் அற்புதங்களையும் ஆச்சர்யங்களையும் இன்னும் ஓரடி உயர்த்திப் பிடிக்கிறது. சரித்திரமும் பூகொளமும் கைகோத்து குதித்துவரும் ஒரு பயண நூல் இது.