மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீது செருகி வைத்திருப்பார்கள். வீதிகளில் ஒரு கூட்டம், இசைக்கருவிகளுடன் பஜனை செய்தபடி வரும். அநேகமாக, அந்த பஜனை முடிந்தபின் தான், சூரிய பகவானேஉதயமாவார். மார்கழியில் இதெல்லாம் எதற்காக?விஞ்ஞான ரீதியாகவே, மார்கழி மாதத்தில் மட்டும், அதுவும் அதிகாலையில் ஏராளமான சக்திகள் (குறிப்பாக வைட்டமின்) வெளிப்பட்டு காற்றில் தவழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் வெளிப்பட்டு வெம்மையை வீசத் தொடங்கியதும் அந்த சக்திகள் அனைத்தும் அப்படியே கரைந்து போய்விடும்.ஆரோக்கியத்தை அளிக்கும் அந்த சக்திகளை நாம் அடைய வேண்டும் என்பதற்காகவே, மார்கழி அதிகாலையில் வீதி பஜனை, கோலமிடுதல் என்றெல்லாம் ஏற்படுத்தி வைத்தார்கள்