இந்த நூலைப்பற்றிப் பல மேடைகளில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது அபிராமி அந்தாதி விரிவுரை களைப் பல அன்பர்கள் அங்கங்கே நிகழ்த்துகிறார்கள். அவர்களில் பலர் நான் எழுதிய விளக்கக் கட்டுரைகளைப் படித்து இன்புற்றதாகச் சொல்கிறார்கள். அந்த அளவில் இவை பயன்படுகிறதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது அபிராமி அந்தாதிக்குப் பலர் உரை எழுதியிருக்கிறார்கள்.