இந்நூலில் அடங்கியுள்ள பன்னிரண்டு கட்டுரைகளும் பெண்ணியம் பற்றி ஆழ அகலமாக ஆய்வு செய்து வாசகர்களுக்கு நல்ல விளக்கம் அளிக்கிறது. பெண் என்பவர் உரிமைக்குரியவே என்று ஒவ்வொருவரும் உணரவேண்டும். பெண்ணின் வாயை அடக்கி, அவள் உணர்வுகளை அடக்கி ஆளும் அரக்கத்தனங்கள் அழியவேண்டும். அதற்கான வெளிப்பாடுகள் 'பெண்ணும் பெண்மையும்' என்னும் இந்நூலில் அடங்கியுள்ளன. கட்டுரைகளை எழுத்தாளர், எதிராஜ் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் அரங்கமல்லிகா அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார்கள். படித்துப் பயன்செய்ய வேண்டுகிறோம்.
-பதிப்பகத்தார்