இந்நூலாசிரியர் இதழியல் பி.காம்., எம்.ஏ., எம்.பில் பட்டம் பெற்றவர். பத்திரிக்கையாளராகப் பணியாற்றும் இவர் எழுத்துலகில் 13 ஆண்டுகள் அனுபவமுள்ளவர். இவர் 100 சிறுகதைகளையும், 2000 சிறுவர் கதைகளையும் எழுதியுள்ளார். மேலும் 2000 புதுக்கவிதைகளும் 20 நாவல்களும் 3000 புதிர் போட்டிகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன. இவர் தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்றுள்ளார். இதுவரை இவரது 135 நூல்கள் வெளியாகி வந்துள்ளது.