தமிழகத்தில் கடந்த ஓராண்டில் காவல் துறையினரின் அத்துமீறல்கள் அதிகரித்திருக்கின்றன என்றும் பாதுகாப்பு என்பதை தாண்டி மற்ற விவகாரங்களில் காவல் துறையின் சக்தி வீணடிக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்ட இடத்துக்கு பாதுகாப்பு வழங்கியது தொடங்கி சட்டசபையில் நுழைந்து உறுப்பினர்களை அகற்றிய சம்பவம் வரை பல நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. காவல் துறை அதிகாரிகளில் வெளிப்படையான அரசியல் சார்பு நிலைகளோடு செயல்படுகிறவர்கள் உண்டு. அதனால் அதிகாரிகளுக்கு இடையிலான கோஷ்டிப் பூசல்கள் அதிகரித்திருக்கின்றன.