சிறுகதைகள் அனைத்தும் வாழ்க்கை நெறிகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இத்தத்துவக் கருத்துகள் அனைத்தும் மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவனவாகவே அமைந்துள்ளன. இவ்வுலக வாழ்வு இனிமை பெறுவதற்கு ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கை நெறிகளை உணர்ந்து செயல்படுதல் என்பது அவசியமாகிறது. இங்கு வாழ்க்கை நெறிகளைக் கூறும் தத்துவங்களாக மூன்று தத்துவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை தொழில் கூறும் தத்துவங்கள், மானிடத் தத்துவங்கள், வாழ்க்கைத் தத்துவங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளைப் பற்றிய கருத்துகளை இனிக் காணலாம்.