ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கதையில் பல்லவர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் அரங்கன் கோவில் உருவான வரலாற்றை போர் மற்றும் காதலுடன் இணைத்து எழுத்தாளர் சாண்டில்யன் இப்புதினத்தை படைத்துள்ளார்.