நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல இந்த உலகின் எதிர்காலமே குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள். நாளைய இளைஞர்கள் எதிர்காலச் சமுதாயச் சிற்பிகள் நோய் பிணிகள் இல்லாத சமுதாயமே எழுச்சியும் புத்துணர்ச்சியும் பெறும். அத்தகு மலர்ச்சி மிக்க சமுதாயம் தோன்ற குழந்தைகள் மருத்தவ நிபுணரான டாக்டர் S. ராஜா அவர்கள் குழந்தைகள் நலம் குறித்து மிகவும் அக்களையும் கவனமும் ஆர்வமும் செலுத்தி அரும்பணி ஆற்றி வருகிறார்.
இளம் பிள்ளைகளை வாதம் தாக்கி முடக்கிப் போட்டுவிடக்கூடாது. அதனால் இந்தச் சமுதாயம் முடங்கிப் போய்விடக் கூடாது என்று முனைப்புடன் செயல்படுகிறார். இளம்பிள்ளை வாதம் வராமல் தடுக்கும் வழிமுறைகளை இந்நூலில் கூறுகிறார். குழந்தைகளுக்குச் சளி, இருமல், தலைவலி வராமல் தடுப்பது எப்படி? குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட உணவுகள் ஊட்டப்பட்ட வேண்டும்? பச்சிளங்குழந்தைகளை எப்படிப் பராமரிப்பது? என்று வகைப்படுத்திக் காட்டுவதுடன் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.