தேவைக்கும், இருப்புக்கும் இடைவெளி அதிகரிக்கும் பொழுது ஏமாற்றம், சலிப்பு, கோபம் போன்றவை ஏற்பட்டு மன அழுத்தத்திற்கு வழிகோலுகின்றன. அப்படி மன அழுத்தம் வந்துவிட்டால் என்ன செய்வது? அதற்கான சில வழிமுறைகளை, அதாவது, படித்தது, கேட்டது மேலும் அனுபவத்தைக் கொண்டு கூறியுள்ளார் ஆசிரியர். நமக்கு ஏற்ற வழிமுறைகளை தக்கமுறையில் வாழ்க்கையில் கடைப்பிடித்து மன அழுத்தத்தை எளிதில் தகர்த்தெறியலாம்.