நம் நாட்டில் உள்ள பெற்றோர்களுக்கு அவர்களுடைய குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் பற்றிச் சிறந்த அளவில் எடுத்துச்சொல்லும் முகமாக எழுதப்பட்டுள்ளது இந்நூல். பள்ளியின் சூழ்நிலை, ஆசிரியர்களின் அணுகுமுறை, கூடப் படிக்கும் மாணவர்களின் பழகும் விதம். அவர்களின் குடும்பச் சூழ்நிலைகள், பள்ளி முதல்வரின் எதிர்பார்ப்புகள் போன்றவையெல்லாம் எவ்வாறு குழந்தைகளின் வளர்ச்சி, அறிவுத் திறன், மனநிலைகளில் பாதிப்பு உண்டாக்குகின்றது அல்லது முன்னேற்றம் ஏற்படுத்துகின்றது என்பதை எடுத்துச் சொல்லும் முகமாகவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கியமாகப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்தச் சமுதாய நோக்கில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்படும். தோல்வி அடைந்தவர்கள் சரியாக மதிக்கப்படாமலும் எற்படும் சூழ்நிலைகள் எவ்வாறு உயிர் இழப்புகளை உண்டாக்குகின்றது. இவை தவிர்க்கப்பட வேண்டும். அதற்குரிய காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டிய என்பது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.