பன்னெடுங்காலமாகவே நாடோடிக் கதைகளை மக்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.ஒரு நாட்டில் மட்டுமல்ல; பல நாடுகளில் சொல்லியும் அதனை மக்கள் கேட்டும் வந்துள்ளார்கள். கற்பனை வளங்கொண்ட பாமர மக்களைக் கவர்ந்த இக்கதைகள் இந்தியா, சீனா, கிரேக்கம் ஆகிய நாடுகளில் மிகுதியாக உள்ளன.
இந் நாடோடிக் கதைகள் சாதாரணமான ஏழை எளிய மக்களின் இன்ப - துன்பங்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை பிரதிபலிப்பவை.
சமூகத்தில் ஒரு தனி மனிதனோ அல்லது ஆட்சி செலுத்தும் அரசனோ தவறு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு தவறு நடக்கும்போது எவ்வாறு சமுதாயத்தில் சீர்கேடான நிலைகள் உருவாகின்றன என்பதனை இந் நாடோடிக் கதைகள் எடுத்துக் காட்டிகின்றன. இக்கதைகளில் கற்பனை மிகுதியாக இருக்கலாம்; ஆனால் நீதியைப் பதிய வைக்கும் உத்திகள் ஏராளம் உண்டு.