உள்ளத்தில் நல்லெண்ண விதைகள் முளைத்தெழுந்து நல்விளைவை ஏற்படுத்துவதற்கு முளைத்தெழுந்து நல்விளைவை ஏற்படுத்தவதற்கு உரமாகப் பயன்படுவது கதைகளே. கதைகள் படிப்பதன் வாயிலாகப் புத்தி கூர்மை பெறும். விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரின் முதல் அமைச்சராக இருந்த அப்பாஜி அவர்களின் புத்தி நுட்பத்தை விளக்கும் 18 கதைகள் இந்நூலில் இட்ம பெற்றுள்ளன.
புத்தி உள்ளவனுக்குச் சித்தி ஆகாத்து எதுவும் இல்லை; அவரவர் உள்ளம் எப்படியோ அப்படியே உலக நடைமுறை; நல் அமைச்சரை உடைய பேரரசை ஏவராலும் கைப்பற்ற முடியாது; எவ்வளவு பெரிய சீமானாக இருந்தாலும் எல்லாம் வெளிப் பகட்டாகத்தான் இருக்கிறது; மனக்கவலை பலக்குறைவு; உட்பொருள் உணர்வது புத்திசாலித்தனம் போன்ற அறிவுரைகளைக் கூறும் கதைகள் படிப்பவர் மனம் கவரத்தக்கவை.