
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.69

Opening the world of stories

Oru Kathaiyin Kathai
Free shipping over ₹500
புலவரும் நல்லாசிரியர் விருதுபெற்ற கவிஞருமான நெல்லை ஆ. கணபதி அவர்கள் சிறுவர் பாடல்களுக்கும் சிறுவர்களுக்கான கதைகளும் எழுதுவதில் சிறந்தவர். அவருடைய பாடல்களும் கதைகளும் சிறுவர் உள்ளங்களில் எளிதில் பதிவாகி எப்போதும் நல்லறத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் பயன்படும். சிறுவர்களைப் படிக்கத் தூண்டும் வகையிலும், பெற்றோர்கள் படித்துப் பிள்ளைகளுக்குக் கதை சொல்லும் வகையிலும் இந்நூலின் எளிய நடையில் கதைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கதையும் சிறுவர்களுக்கு நல்லறிவு ஊட்டும்.
அத்தனை உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும், பொய் சொன்னால் இழப்பு ஏற்படும், குடி குடியைக் கெடுக்கும், தோல்வியிலும் நன்மை உண்டு, துன்பம் செய்வதன் உணரும் வண்ணம் நன்மை செய்யவேண்டும், மெலிந்தவனுக்கும் மேன்மை வரும், சகுனம் பார்ப்பது மூடத்தனம், நல்லவர்கள் ஆபத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள். மூத்தோர் வார்த்தை அமுதம் போன்றது, பிடிவாதக் குணம் இடர்தரும், பட்டால்தான் புத்திவரும், உதவும் பண்பு உயர்வானது போன்ற போதனைக் கதைகள் சிறுவர்களைச் சாதனை படைக்கத்தூண்டும்.