இணைய எழுத்தாளர் என்கிற முத்திரையைத் தாண்டி வெகுஜனப் பத்திரிகைகளில் பலர் இப்பொழுது சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். இத்தனை எழுத்துத் திறமைகளை வைத்துக் கொண்டு இவர்கள் எங்கே இவ்வளவு நாள் பதுங்கி இருந்தார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. சிவக்குமார் அசோகனின் படைப்புகளில் சின்னஞ்சிறு கதையானாலும், சின்ன அங்கதம் என்றாலும் சுவாரஸ்யமும் குறும்பும் கொப்பளிக்கிறது. பள்ளிக் காலங்களை நான் கழித்த தஞ்சை மண்ணின் வாசம் அவரது எழுத்துகளில் ஒங்கியே வீசுகிறது. சின்னத் துணுக்கு ஆனாலும் அதில் ஒரு சொடுக்கு இருக்கிறது. வாசகனைக் கட்டிப்போடும் திறன் இவர் விரலில் பிறக்கிற எழுத்துகளுக்கு இருக்கிறது.