என்ன இருக்கிறது இந்தத் தொகுப்பில் 50 கவிஞர்களின் 400 கவிதைகள், கவிதைகள் குறித்துப் பல்வேறு ஆளுமைகளின் கருத்துகள். எந்த ஒரு கவிதை வாசகனுக்கும் ஓர் அறிமுகமாகவோ, தேடிப் படிக்கவோ, தனக்குப் பிடித்த கவிதைகளை அல்லது கவி ஆளுமையைக் கண்டடையவோ, இந்தத் தொகுப்பு உதவக் கூடும். முதிர் இளம் என்ற எந்தப் பாகுபாடுமின்றி, வாசிக்கக் கிடைத்த வாசிக்கையில் ஈர்த்த கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கவிதையிலும் வாசிப்பிலும் பெரும் ஈடுபாடு கொண்ட நீண்ட கால கவிதை வாசகன் ஒருவனின் ரசனையை, இன் னொரு வாசகனுக்குக் கடத்தும் ஒரு சிறு முயற்சியே இந்தத் தொகுப்பு, தொகுக்கப்பட வேண்டிய கவிஞர்களின் கவிதைகள் இன்னமும் நிறைய இருக்கின்றன. இம்முயற்சிக்கான ஆரம்பத்தின் ஒரு நுனிதான் இத்தொகுப்பு.