தேனம்மையின் கவிதைகள் ஒற்றை இலக்கை மட்டுமே குறிவைப்பவை அல்ல; ஒற்றைப் பரிமாணம் கொண்டவையும் அல்ல. சமூகப் பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்கும் ஒத்த இடம் தந்திருப்பவையாக வெவ்வேறு உள்ளடக்கங்களுடன் மலர்ந்திருப்பதனாலேயே வேறுபட்ட ரசனை கொண்ட வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய தன்மை இயல்பாகவே இவற்றுக்கு அமைந்து விடுகிறது. அன்ன பட்சியிலிருக்கும் அருமையான சொல்லாட்சிகளும் பொருள் நுட்பங்களும் நம் உள்ளங்களில் என்றென்றும் கல்வெட்டாய் உறைந்திருக்கும்.