நாட்டுக்குழைத்த நல்லவர்கள் வருங்காலத் தலைமுறை என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க சொல்லால், எழுத்தால், அர்த்தமுள்ள செயலால் அஞ்சா நெஞ்சமுடன் பாடுபட்டவர் வ.உ.சிதம்பரனார்.
கப்பலோட்டினார் வெள்ளையர் கதி கலங்கினர், மேடையில் முழங்கினார், வெள்ளை அரசு நடுநடுங்கியது. சிறையில் அடைத்து செக்கிழக்க வைத்தது, சிறை மீண்ட சிங்கம் தொழிற்சங்கப் பணி புரிந்தது. தமிழ் இலக்கிய தொண்டாற்றியது, அவர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தார். வரலாற்றில் அழியாத தடம் பதித்தார். வாசக நெஞ்சங்களில் இதழ் விரிய வேண்டிய வாச நறுமலர் இந்த நூல்.