ஜவஹர்லால் நேருவை குழந்தைகளுக்கு மட்டுமாபிடிக்கும்; நம் எல்லோருக்கும்தான் உங்களுக்குப் பிடிப்பது போலத்தான் எனக்கும்!
அவரது வாழ்க்கை, அரசியலோடு இரண்டறக் கலந்தது. அவரது சிந்தனை மனிதகுல முன்னேற்றத்தோடு தொடர்புடையது. அவரது கோபம் ரசனைக்குரியது! நியாமானது! காந்தியோடு அவர் கொண்ட கருத்து முரண்பாடுகள் தக்கப் பொருத்தம் வாய்ந்தவை. அவரது தேசபக்தி மெய்சிலிர்க்க வைக்கும். அவரது இந்திய தரிசனம் உலகைக் கவர்ந்தது.
உலக சமாதானத்தை நேசித்தவர்; சோவியத் நாட்டை நேசித்தவர். சோவியத் நாட்டைப் போல இந்தியாவை நிர்மாணிக்க அதே வழியில் ஐந்தாண்டு திட்டங்களை தீட்டியவர். சோவியத் உதவியுடன் இந்தியத் தொழில்துறை முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்டவர். ஜனநாயக சோஷலிச சிந்தனைகளை விதைத்தவர்.
இந்தியாவின் ஒப்பற்ற அரசியல் தலைவர். உலகைக்கவர்ந்த ஜவஹர்லால் நேரு!
அவரது வாழ்வும் பணியும் படிக்க வேண்டியதும் மனத்தில் பதிவு செய்ய வேண்டியதும் ஆகும்.