அறிமுகச் செய்திகள் - 1000'' என்னும் இந்நூலில் 1000 செய்திகள் உள்ளன. முதல் செய்தியே நூல்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்தியாக உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்ற செய்தியாக உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்ற செய்தி நமது மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கிறது. நாளுக்கு நாள் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கிறது. புத்தக்கண்காட்சிகளிலும் புத்தக விற்பனை நிலையங்களிலும் பொது அறிவு நூல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. பொது அறிவுத் தேர்வுகளைச் சந்தித்து வேலை தேடும் பொது அறிவுத் தேர்வுகளைச் சந்தித்து வேலை தேடும் கட்டாயநிலை இன்று நிலவுகிறது. எனவே இதுபோன்ற நூல்கள் நல்ல பயனளிக்கின்றன. அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன. அறிவைக்கொண்டே இன்று ஒவ்வொருவர் வாழ்க்கையும் நிர்ணயிக்கப்படுகிறது. அறிவு பொருளையும் புகழையும் ஈட்டித்தருகிறது.
பல மலர்களிலிருந்து தேனைச் சேகரித்துத் தரும் தேனீயைப்போல் பல செய்தித்தாள்களிலிருந்தும், பல நூல்களிலிருந்தும் பொது அறிவுச் செய்திகளைச் சேகரித்துத் தருவதில் நூலாசிரியர் சா. அனந்தகுமார் அவர்கள் அக்கறை செலுத்தி வருகிறார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வாசகர்களின் தேவைகளுக்கு மிகவும் உதவிவருகிறார். இந்நூலுக்கு வாசகர்களின் ஆதரவு பெருமளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.