பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1823-1874) தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் குறித்த தொன்மங்கள் சுவையானவை. சில தனி மனிதர்களின் செயல்பாடுகள் பெரிதும் தனித்து இருக்கும் போது, அவர்களை சமகால நிகழ்வுகளிலிருந்து அந்நியப்படுத்தி, தொன்மங்களை உருவாக்கி, அவரை "கடவுள்” தன்மைமிக்கவராகக் காட்டுவது மரபு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலாருக்கும் மேற்குறித்த தன்மை நிகழ்ந்தது. சாகாக்கலை கைவரப்பெற்று அவர் மறைந்து விட்டதாக இன்றும் நம்பப்படுகிறது. அவர் மீண்டும் வருவார் என்றும் சொல்லப்படுகிறது. வள்ளலார் தொடர்பான இவ்வகையான தொன்மை உருவாக்கம் குறித்த உரையாடல் இங்கு நிகழ்த்தப்படுகிறது. அவரது செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுரையாடலை நாம் நிகழ்த்தலாம்.