ஆங்கிலம் இன்று உலக மொழியாக, உலகத் தொடர்பு மொழியாக வளர்ந்துள்ளது.
பலமொழிகளின் சொற்களையும் ஏற்றுக்கொண்டு வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால்
தமிழ்மொழி மிகத் தொன்மையானதாகவும், தனித்தன்மையுடையதாகவும் பிறமொழிச்
சொற்கள் கலவாத தூய மொழியாகவும் விளங்குகிறது. எனவே ஒன்றையொன்று உணர்ந்து
புரிந்து கொள்ள சிரமமும் சிக்கலும் உள்ளது. இந்த இடைவெளியைப் போக்கவே 'மரபு
சொற்களும் சொற்றொடர்களும்' Idioms and phrases என்னும் இந்நூல்
எழுந்துள்ளது. ஆங்கில மரபுச் சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் தமிழில்
விளக்கம் தந்து அவற்றின் பயன்பாடுகளை விளக்க முயன்றுள்ளது. இந்நூலினைத்
திருமதி. உமா பாஸ்கரன் என்பவர் அரிதின் முயன்று தொகுத்திருப்பது
போற்றத்தக்கது