கவிதையில் நெடும் பாரம்பரியம் கொண்ட நமக்குச் சமகாலக்கவிதைக் கோட்பாடு என்று எதுவும் இல்லை. இத்தனை நீண்ட கவிதை மரபு கொண்ட எந்த மொழியும் இத்தகைய கோட்பாட்டு வறட்சி கொண்டிருக்காது. இதைப் போக்குவதற்கு உரிய திறன் ஆனந்திடம் உள்ளது என்பதற்கு இக்கட்டுரைகளே சான்று. ஆனந்த் பேசம் பல்வேறு விஷயங்கள் எளிய மொழியில் இருப்பினும் அவற்றின் ஆழம் காரணமாகத் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கின்றன.