நம் வாழ்க்கையின் முக்கியத்துவம் உணர்த்துவதே கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று ஆசிரியரின் சிந்தனையை வலியுறுத்தி கூறும் நூலாக இந்நூல் அமைந்துள்ளது. ஒழுங்குமுறை, அதிகாரமும் சுதந்திரமும், மெய்யுணர்வு, படைப்பாற்றலின் இயல்பு, கல்வியில் சமயத்தின் பங்கு என்பன போன்ற கல்வித் தொடர்பான பல்வேறு விஷயங்களை இந்நூலில் விரிவாக ஆய்வு செய்கிறார் ஆசிரியர்.