விவரணை நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட கலைக் கோயில்கள் எவ்வளவு என்று கூறமுடியாத அளவு பெருகியுள்ளன. அத்தகைய கோயில்களில் சிலவற்றை அளித்திருக்கிறேன். தென்னகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் கலை ஓங்கி நின்றது. ஆகவே அவர்கள் கலைப் படைப்புகளை பலர் அறியும்படி பல படங்களுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். படித்தபின் இக்கோயில்களை உடனே சென்று பார்க்க வேண்டும் என்ற அவா எழுமானால், அதுவே இந்நூலின் பயனாகும். கோயிலில் பல சிலைகள் உள்ளன. ஆனால் பலவற்றை பலர் அறியாதவாறு தான் உள்ளனர். சில அரிய சிலைகளைப்பற்றி விளக்கி இருக்கிறேன்.