நீங்கள்
ஆனந்தமான நிலையில் இருக்கும்போது எல்லாமே அழகுதான். நீங்கள் ஆனந்தம்
இல்லாமல் இருக்கும்போது உங்களுக்கு எதுவுமே அழகில்லை. உங்கள் தன்மை
எப்படியிருக்கிறதோ அப்படித்தான் உங்கள் பேச்சும் இருக்கும். எனவே பேசும்
முறையை சரிப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, நம் உள்தன்மையை எப்படி
வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் வைத்தால் பயனளிப்பதாய் இருக்கும்.
மகிழ்ச்சியாக இருப்பது எப்படியென்பதை புரிந்துகொண்டால் ' உங்கள்
தன்மைக்கேற்ப உங்கள் திறமைக்கேற்ப எது நிகழவேண்டுமோ அது இயல்பாகவே உங்கள்
வாழ்க்கையில் நிகழும். உங்களையும் உங்கள் குழந்தையையும் ஒப்பிட்டுப்
பார்த்தால், உண்மையில் யார் அதிக ஆனந்தமாக இருக்கிறார்கள். நிச்சயமாக
உங்கள் குழந்தைதான். அப்படியானால் யாரைப் பார்த்த்து வாழ்க்கையை புரிந்து
கொள்ள வேண்டும்?