நாடு புகழ் நாடு' என்ற தலைப்பில் புகழ் பெறுவதில் நாட்டம் கொள் என்ற பொருளும் உள்ளது. ஒவ்வொருவரும் புகழ் பெறத் தகுந்த செய்ல்களில் ஈடுபட்டால் அந்த நாடு புகழ்த்தக்க நாடாகும் என்ற பொருளும் உள்ளது. சிறுவர்களை சிறுமையான செய்ல்களில் ஈடுபடவிடாமல், பெருமை பெறும் செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். இளைஞர்களை இழிவான ஞெயல்களில் ஈடுபலவிடாமல் எழுச்சியான செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். அதற்குக் குடும்பமும் சமுதாயமும் உறுதுணை செய்ய வேண்டும். நாடு சொர்க்கமாக மாற நல்ல நூல்கள் வெளிவரவேண்டும். நல்ல நூல்கள் மூலமாக நல்ல கருத்துக்கள் நச்சுக் களைகளும் வளர்ந்திருப்பதால் சமுதாயச் சீரழிவுகள் பெருகுகின்றன . எல்லாம் நல்ல பயிர்களாகவே வளர்வதற்கு நல்ல கருத்துக்களை விதைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
நல்ல கருத்துக்களை விதைத்து, நல்ல விளைவைப் பெறுவதற்காகப் பல நல்ல நூல்களை வெளியிட்டுவரும் எமது அறிவுப் பதிப்பகம்,10 -க்கு மேற்பட்ட சிறுவர் நூல்கள் படைத்த எழுத்தாளர் ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்கள் உருவாக்கிய நாடு புகழ் நாடு' என்னும் நூலை வெளியிட்டு வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறோம்.
- பதிப்பகத்தார்.