ஜனசக்தி வாத இதழில் 1953 -1961 க்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த அயல்நாட்டுச் சிறுகதைகள் ' மனிதர்கள்' என்னும் இந்நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பேசுவதற்கே ஒரு மனிதன் வெட்கப்படத்தான் வேண்டும்' எவற்றைப்பற்றி என்பதை ' மனிதர்கள் ' என்ற ரஷ்யக்கதை எடுத்துரைக்கிறது.
அவன் இருந்தும் சந்தேகம், இறந்தும் சந்தேகமாகிவிட்டது' யார் என்பதை 'அமரத்துவம் என்ற அமெரிக்கக்கதை சுட்டிக்காட்டுகிறது.அவள் வாங்கி வந்த மருந்துக்கு வேலையே இல்லை'ஏன் என்ன நடந்தது எடுத்துச் சொல்கிறது மருந்து ' என்ற பிரேஞ்சுக்கதை.
ஐந்தறிவுகொண்ட நாய் எஜமானின் அந்தரங்களை அம்பலப்படுத்தியதா என்ற உண்மையைப் படித்த நாய் 'என்ற செக்கோஸ்லோவேகியா கதை சொல்கிறது. மேற்கண்ட கதைகளைத் தொகுத்துத் தந்த எழுத்தாளர் எம். ஏ. பழனியப்பன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, முற்போக்கு அம்சம் கொண்ட இந்நூலை வெளியிட்டு வாசகர்களின் ஆதரவைவேண்டுகிறோம்.
- பதிப்பகத்தார்.