அனுப்பப்பட்டி திரு. ப.சு.மணியன் அவர்கள் ஒரு சிறந்த அனுபவமுள்ள சித்த
மருத்துவர். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பலநூறு மனிதர்களின் வாழ்க்கையை
மாற்றி அமைத்த மனிதத்தேனீ இவர். சுமார் 15க்கும் மேற்பட்ட பலவகை நூல்களை
எழுதிள்ளார். சித்தமருத்துவம், அன்றாட வாழ்க்கை நெறி முறைகள், யோகம், ஞானம்
போன்ற மிகச்சிறந்த நூல்களை எழுதியுள்ள இவர் 'சித்தர் ஞானபீடம்' என்ற
அமைப்பை நிறுவி 10 ஆண்டுகளுக்கும் மேலாக யோக, ஞான ரகசியங்களை கற்றுத்
தருகின்றார். தீட்சையும் அறிந்து தெளிந்த நல்சீடர்களையும் உருவாக்கி
யுள்ளார். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தமிழ் வைத்தியத்தையும்,
தமிழ் ஞானத்தையும் தொண்டாகச் செய்து வருகின்றார்.