மகாசன்னிதானத்தின் அரிய கருத்துகளை உள்வாங்கி,சில கதைகளைப் படைத்திருக்கின்றார். தம் சொந்த ஊர் மக்களின் பெயர்களை, கிராமங்களை படைப்பில் பயன்படுத்தி மண்ணின் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
திருமடத்தின் முகவரிதான் எங்கள் முகவரி! இரத்த சொந்தங்களை விட,திருமடம் தந்த உறவும், நட்பும்தான் எங்கள் உண்மை உறவு, நட்பு !அப்படிஇத்தான் எங்களை குருமகாசன்னிதானம் ஆட்படுத்தி இருக்கின்றார்கள்!
திருமடம் தந்த உறவிலும், நட்பிலும் வளர்ந்துகொண்டிருக்கும் அன்புத் தம்பி சிங்காரவடிவேல் எழுத்திலும், படியிலும் ஒருசேரக் கவனம் செலுத்தி வளர நல்வாழ்த்துகள்!.