வாழ்க்கையை பொறுத்தமட்டில், மனிதன் பரீட்சை எழுதியப் பிறகுதான் பாடங்களைக்
கற்றுக் கொள்கிறான். ஆகையால்தான் என்னவோ பெரும்பாலோர் பாடத்தைக் கற்றுக்
கொள்ளுவதிலேயே வாழ்க்கையை கடத்தி விடுகிறார்கள். வாழ்க்கைப் பரீட்சையில்
அவர்களால் வெற்றிக் கொள்ள முடிவதில்லை . சிலரோ, தனக்கு முன்மாதிரிகளைத்
தேர்ந்தெடுத்து, அவர்களுடைய அனுபவங்களை தனக்கான பாடமாக கற்பதால் வாழ்க்கை
அவர்களுக்கு வசப்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களில் நாம் செலுத்தும் கவனம்,
மகா வெற்றிகளை நமக்கு ஈட்டித் தரும். பல கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும்
செய்ய முடியாததை ஒரு புன்னகை செய்து விடுகிறதே அதுபோல்தான் வாழ்க்கை .
பிறர் நமக்கு எப்படி மரியாதையும் மதிப்பும் கொடுக்க வேண்டும் என்று
எண்ணுகிறோமோ, எதிர்ப்பார்க் கிறோமோ, அதையே நாம் அவர்களுக்கு செய்ய
வேண்டும்.