சாதாரண பெட்டிக்கடையில் இருந்து பன்னாட்டு கணினித் துறை நிறுவனங்கள்வரை
செய்வதென்னவோ ஒரு தொழில். சுயதொழிலோ, கூட்டுத்தொழிலோ... மொத்தத்தில் ஒரு
தொழில். பெட்டிக்கடை வியாபாரம் உள்ளூர் மேட்டர். அதை உலகளாவிய அளவுக்கு
செய்ய முடிந்தால் அதுவே ஏற்றுமதித் தொழில். லாஜிக்கெல்லாம் ரொம்ப சிம்பிள்.
எதையெல்லாம் ஏற்றுமதி செய்து சம்பாதிக்கலாம்? புண்ணாக்கில் இருந்து
ப்ளூசிப் வரை எதையும் ஏற்றுமதி செய்து கல்லாவை நிரப்பலாம். ஆனால், இதிலும்
சூட்சுமம் இல்லாமல் இல்லை என்கிறார் நூலாசிரியர் எஸ். சந்திரசேகர்.
விரும்பும் பொருளை ஏற்றுமதி செய்வது எப்படி? என்பதோடு எவ்வளவு
லாபகரமாகவும், சாதுரியமாகவும், சட்ட வரையறைகளை மீறாமலும் செய்ய வேண்டும்
என்பன போன்ற நுணுக்கங்களை மிகச் சிறப்பாக இந்த நூலில் விளக்கியிருப்பது
ஏற்றுமதித் தொழில் முனைவோருக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும்.