கையிலுள்ள கோடுகளைப் பார்த்து சோசியம் சொல்லுவது உலக முழுமையும் பரவியுள்ள ஒரு வித்தையாகும். அது வெறும் பழக்கமே அல்லாது உண்மையல்ல. நமது கையிலுள்ள கோடுகளைப் போல் நமது ஒரு காலத்து பூர்வப் பங்காளிகளாகிய வாலில்லாக் குரங்குகளுக்கும் உண்டு. இன்னும் தூரப்பங்காளிகளாகிய (Distant Cousins) வாலுடைய குரங்குகளுக்கும் கையில் கோடுகள் இருக்கின்றன. ஆனால், காட்சி சாலைகளில் வசிக்கும் காட்டு மனித குரங்குகளின் கைகளைப் பார்த்து சோதிடம் சொல்வார் யாருமில்லை!''