"மொத்த தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன் அவள் வந்து பூ விரும்பினாள் தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன் இரு கை நிறைய தாமரையை ஏந்தி அவள் முகர்கையில் அவளிடம் ஒரு தாமரை தடாகத்தில் ஒரு தாமரை தவிர என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது இப்போது"