வார்த்தைகள் முறுக்கிக்கொண்டு அவஸ்தைப்படாமல் படுத்தாமல் அனுபவ உணர்வுகளின் சாராம்சத்தால் கூர்மையடைந்து மன உணர்வுகளில் பாய்ந்து அதிர்வடையச் செய்கின்றன. இதற்கேற்ப செறிவான படிமங்களும், இறுக்கமான கவிதை அமைப்பும் உயிர்த்துடிப்புடன் வெகு இயல்பாக இணைந்து பன்முக அர்த்தத் தளத்தில் இயங்கிக் கவிதைக் கலையாகப் பரிமாணம் கொள்கிறது.