நம் நாட்டில் ஒரு சாதாரண குடிமகனால் அறிந்து கொள்ள முடியாத பல விஷயங்களுள் சட்டமும் ஒன்று. நிறைய படித்தவர்களும், வக்கீல்களும் மட்டுமே சட்ட வழிமுறைகளை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். நாம் எங்கு போவது? எப்படி கற்பது? எது சரி? எது தவறு? சட்டங்களைப் பொறுத்தவரை வீடு, மனை, சொத்துரிமை தொடர்பான சட்டபிரிவுகள் ஏராளம். இவற்றுள் பெரும்பான்மையான ஷரத்துகள் நாம் அறியாதவை.ஏனோ இவற்றை கற்பதற்கும்,புரிந்துகொள்வதற்கும் நாம் முயல்வதில்லை.ஒருவேளை அந்தப் புத்தகங்களும் அதில் சொல்லப்ட்டிருக்கும் மொழிநடையும் கடினமாகத் தோன்றுவது காரணமாக இருக்கும்.