கட்டுமானத்துறையில் ஏற்படும் பிரச்சனைகளையும், தீர்வுகளையும் சொல்லக்கூடிய தகுதி பெரும்பாலான கட்டுநர்களுக்கு உண்டு என்றாலும், அதை அனைவரும் படிக்கக்கூடிய வகையில் எளிய தமிழில் சொக்கும் நடையில் எழுதுவதற்கு சிலருக்கே இயலும். திரு.ரூபி மனோகரன் அவர்களுக்கு அது முடிந்திருக்கிறது. கட்டுமானத்துறையில் அவருக்கு இருக்கும் அனுபவம் அதை எழுத்து நடையில் சொல்வதற்கு அவருக்கு இருக்கும் முதிர்ச்சி ஆகிய இரண்டும் இணைந்து இந்நூலை ஆக்கி இருக்கிறது.