கற்றோர் நோக்கில் முன்மாதிரியான ஒரு மாமனிதர்; ஒருவரைப்பற்றி , பொதுவான பார்வையில் , ஒரு வகை எண்ணம் தோன்றலாம். ஒவ்வொருவர் பார்வையும் அவ்வாறே இருக்குமா ?ஒவ்வொருவர்க்கும் அவர் ஆளுமை ஒவ்வொரு வகையில் தோற்றமளிக்காலம் . அவரைப் பற்றிப் பல பேர் எவ்வாறு எண்ணுகிறார்கள் என்பதைத் தொகுக்கும்போது அவரது ஆளுமையின் தன்மை பன்முகம் கொண்டு தோன்றலாம்.. பல உண்மைகள், தெரிந்தவை தெரியாதவை எனப் பலவகையாக வெளிப்படலாம். மேலும் படிப்போர்க்கு ஒருவரின் குணநலனை, பணியை எவ்வெவ்வாறு உலகம் அளந்து பார்க்கிறது எனக் கண்டு, தமக்குப் பிடித்த போக்கினைப் பின் பற்றி உலக மக்களை அளந்து பார்க்க இது வழி வகுக்கவும் உதவலாம். இந்த எண்ணம் கா.மீ.யின் வரலாற்று நூலாசிரியர்களாகிய எங்களுக்குப் பல வகையில் உதவலாம் எனக் கருதினோம். எனவே இவருடன் தொடர்புடையோர் பலரது கருத்துகளையும் கேட்க விரும்பினோம் . அவர்களெல்லாம், பலவேறுபட்ட நிலைகளிலுள்ளோர், பல்வேறு காலங்களில் இவருடன் தொடர்புடையோர். துணைவேந்தர்கள் முதல் அலுவலகப்பணியாளர்கள் வரை, பற்பலர் பல காலங்களில் இவரிடம் படித்தோர், பலவேறுபட்ட நிலைகளில் இவருடன், இவரிடம் ஆசிரியப்பணியாற்றியோர், இவர் முதல்வராக இருக்க இவருடன்பல இடங்களில் ஆசிரியப் பணியாற்றியோர், இவர் இயக்குநராக அமையிவருடன் பணியாற்றிய அலுவலர்கள் .இவ்வாறு பலர்.ஏறக்குறைய பற்பலர் எங்கள் குறிக்கோளை உணர்ந்து. விரும்பி உடனடியாக மறுமடல் வரைந்தனர். அவர்கட்கு எங்கள் நன்றியைப்படைத்துக் கொள்கிறோம்.
-பதிப்பகத்தார்.