டி. செல்வராஜின் இந்த நாவல் தோல் தொழிலாளர்களைப் பற்றிய முதல் இலக்கியப் பதிவு. திண்டுக்கல் மாவட்டத் தோல் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த சமூக வரலாற்றைப் பொதுவுடைமை இயக்கத்தின் வரலாற்றோடு இணைத்துச் சொல்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வைப் போராட்ட உணர்வோடும் நம்பிக்கையோடும் எழுச்சியோடும் சித்திரிக்கிறது. மக்ஸீம் கார்க்கி முன்னெடுத்த சோசலிச யதார்த்தவாதம் தமிழ் நாவல் உலகில் விழுதுவிட்டு நிற்பதற்கு இந்நாவல் ஒரு சான்று. -பா.ஆனந்தகுமார்