நீந்திக் களித்த கடல்; தமிழ் நாட்டின் கிராமங்களின் வட்டாரச் சொற்களுக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. அது
கோவையாகட்டும், மதுரையாகட்டும், நெல்லையாகட்டும், குமரியாகட்டும், அதன் சிறப்பு என்பது நமிழ் மக்களின்
அன்றாட வாழ்வினை குறித்து மேன்மைபடுத்துவதாகும். குமரி மக்களின் வாழ்வு முறை அவர்கள் கழிக்கும் அன்றாட
காய்ச்சிகள் எல்லாவற்றையும் படம்பிடித்துக் காட்டுகின்றது இச்சிறுகதைத் தொகுப்பு.கடலோரத்தில் அவர்கள் நடத்தும்
வாழ்க்கை நகர்வுகள், நுகர்வுகள் சோர்ந்து கிடப்பவனையும் எழ வைக்கும் முயற்சிகள் கதாபாத்திரங்களுக்குமுண்டு
எனும் உண்மை அடித்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கட்டுமரத்திலேறிச் சென்று திரும்பி வருவதற்குள் தம்
மக்கள் மனைவி கரையிலிருந்து கொண்டு ஒரு பிரளயத்தையே சந்தித்துவிட்டு திரும்பும் உணர்வு ஆதங்கத்தோடு
வெளிப்படுகிறது.
_ பதிப்பகத்தார்.